மக்கள் ஊரடங்குக்கு இடையே திட்டமிட்டப்படி நடைபெற்ற திருமணங்கள்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்க இயலாமல் போனாலும் திட்டமிட்டப்படி திருமணங்கள் நடைபெற்றன. மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகில் உள்ள பூங்கா முருகன் கோயிலில் இன்று அதிகாலையிலேயே திருமணங்கள் நடைபெற்றன. மக்கள் ஊரடங்கு காரணமாக உறவினர்கள், நண்பர்கள் வர இயலாத நிலையிலும் திட்டமிட்டப்படி திருமணங்கள் நடைபெற்றன. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு எளிமையான முறையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், திருமணத்திற்கு பிறகு கோயில் நடை சாத்தப்பட்டது.

Exit mobile version