மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கும், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 35டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்ககடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு, இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version