ஆப்கனில் விரைவில் ஆட்சி அமைப்போம் – தாலிபன்கள்

ஆப்கனில் அரசு நிர்வாகத்தை முறைப்படுத்தி, ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டி வரும் தாலிபன்கள் விரைவில் புதிய அரசு அமைய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்கனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபன்கள், புதிய அரசாங்கத்தை விரைவில் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாகாண ஆளுநர்கள், அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாக கூறியுள்ள தாலிபன்கள், முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சில் தலைவர் அப்தில்லா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை, தாலிபனின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதி செய்யுள்ளார். இதனிடையே, பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தாலிபன்களுக்கும், எதிர்ப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Exit mobile version