"சூரரைப் போற்று" படத்தை திரையரங்கில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் – திரையரங்க உரிமையாளர்கள்

நடிகர் சூர்யா நடித்துள்ள “சூரரைப் போற்று” திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான “2 டி எண்டர்டெயின்மெண்ட்” தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் “பொன்மகள் வந்தாள்”. இந்த படத்தை அமேசான் ப்ரைமிற்கு 9 கோடி ரூபாய்க்கு சூர்யா விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சூர்யாவின் இந்த முடிவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும்  தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சூர்யா மட்டும் லாபம் பார்ப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், நடிகர் சூர்யா நடித்துள்ள “சூரரைப் போற்று” திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சூர்யாவின் உறவினர்களான எஸ்.ஆர்.பிரபு, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உள்ளிட்டோரின் திரைப்படங்களையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version