மத்தியில் வலிமையான ஆட்சித் தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்

2014 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரே தொகுதியில் வெற்றி பெற்ற போதும் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்து கெளரவப்படுத்தியதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யவும், ஆலையை திறக்கவும் காரணமாக இருந்த திமுக தற்போது நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் விரைவில் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்றும், ஏழைகளுக்கு கொடுப்பதை நிறுத்தும் ஒரே கட்சி திமுக என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.

மத்தியில் வலிமையான ஆட்சித் தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version