கைலாசாவில் விவசாயம் செய்ய நிலம் வேண்டும்!

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில், விவசாயம் செய்ய நிலம் கேட்டு மதுரையைச் சேர்ந்த இயற்கை விவசாயி கடிதம் எழுதியுள்ளார். பாலியல் புகாரில் சிக்கி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த அவர், அந்நாட்டிற்கான நாணயங்களையும் வெளியிட்டார். தனது நாட்டில் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சமீபத்தில் நித்யானந்தா அறிவித்தார்.

இந்நிலையில் கைலாசாவில் விவசாயம் செய்ய நிலம் கேட்டு மதுரையைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாண்டித்துரை நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தான் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மதுரை பிரபல உணவக உரிமையாளரின் கடிதத்துக்கு தனது யு டியூப் சேனல் வாயிலாக பதிலளித்திருந்த நித்யானந்தா, விரைவில் பாண்டித்துரைக்கும் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version