2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வெங்கய்யா நாயுடுவை சந்தித்து அழைப்பு – அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் அழைத்தார்

தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இலக்கு நிர்ணயித்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தொழில்துறை அமைச்சர் சம்பத் இன்று சந்தித்தார். முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருமாறு அவர்களுக்கு அமைச்சர் சம்பத் அழைப்பு விடுத்தார். .

 

 

Exit mobile version