தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவே ஒன்றிணைந்தோம் : அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் ஒன்றிணைந்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருப்போரூரில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணியில் சேர்ந்ததாக கூறினார். திமுக கூட்டணி சாராய கூட்டணி என்றும், அதிமுக கூட்டணி விவசாய கூட்டணி என்றும், விவசாயிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடக்கின்ற தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Exit mobile version