திருப்பரங்குன்றம் சுயேட்சை வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல்

திருப்பரங்குன்றம் சுயேட்சை வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அண்மையில் அரசியல் தலைவர்களை ஒருமையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், செல்லபாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் செல்லபாண்டியன் அளித்த புகாரின் பேரில், அவருக்கு பாதுகாப்பு அளிக்க மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version