“உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவின் வெற்றிக்கு, அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்”

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவின் வெற்றிக்கு, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தொண்டர்கள் முதல் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரும் கலந்து கொண்டார்.

Exit mobile version