யாருக்கு வளர்பிறை..? யாருக்கு தேய்பிறை..? : பேரவையில் விவாதம்

அதிமுகவிற்கு வளர்பிறை என்பதை மக்கள் தீர்மானித்து விட்டதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளித்த முதலமைச்சர், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மூலம், யாருக்கு வளர்பிறை..? யாருக்கு தேய்பிறை..? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு, முழுக்க முழுக்க திமுகவே காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு, திமுக நிலம் வழங்காமல் இருந்திருந்தால், தமிழகத்தில் பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version