நீர்வள ஆதாரத்துறை, கட்டிட அமைப்புத்துறை: உதவிப் பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்

நீர்வள ஆதாரத்துறை மற்றும் கட்டிட அமைப்புத்துறையில் நியமிக்கப்பட்டுள்ள உதவிப் பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் நீர்வள ஆதாரத்துறை மற்றும் கட்டிட அமைப்புத்துறையில் உள்ள உதவிப் பொறியாளர் பதவிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 131 உதவிப் பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Exit mobile version