முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு : கெலவரப்பள்ளி அணை திறக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, கெலவரப்பள்ளி அணை திறக்கப்பட்டது.

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் வலதுபுற மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களிலிருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக, தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.

சுழற்சி முறையில், 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன்மூலம், ஓசூர் சுற்று வட்டாரத்தில் உள்ள எட்டாயிரம் ஏக்கர் விளைநிலங்கள், பாசனவசதி பெறும். அணையின் நீர்மட்டம் 44 புள்ளி 28 அடியாக உள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Exit mobile version