குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

குற்றாலம் மெயின் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக, மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாலை வேலையில் குற்றால மெயின் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தடுப்பு வேலிகளை தாண்டி தண்ணீர் கொட்டியதுடன், மர கிளைகள் அடித்து வரப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Exit mobile version