பவானிசாகர் அணையிலிருந்து தேவைக்கேற்ப நீர் திறப்பின் அளவு மாற்றப்படும்:பொதுப்பணித்துறை

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாசனத்துக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96 புள்ளி 41 அடியாகவும், நீர் இருப்பு 26 டிஎம்சி யாகவும் உள்ளது. அணைக்கு விநாடிக்கு நாலாயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தேவைக்கேற்ப நீர் திறப்பின் அளவு மாற்றப்படும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version