பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,721 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4 ,721 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, இந்த மாதத்தில் 2வது முறையாக முழு கொள்ளளவான 105 அடியை மீண்டும் எட்டியது. தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோர பகுதி கிராமங்களுக்கு வருவாய் துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 32 புள்ளி 8 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 721 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் நீரின் அளவாது 4 ஆயிரத்து 720 கனஅடியாகவும் உள்ளது.

 

Exit mobile version