பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 30,396 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு 30, 396 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 105 அடியில் நீடித்து வருவதால், அணையில் இருந்து 30 ,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு, ஒலி பெருக்கி மூலமும், தண்டோரா மூலமும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கரையோர மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மேலும் அனைத்து துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version