பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 96 அடியாக நீடிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து சீராக உள்ளதால் கடந்த 22 நாட்களாக அணையின் நீர்மட்டம் 96 அடியாக உள்ளது.. 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து கடந்த 3 வாரமாக அணைக்கு வரும் நீரின் அளவும், வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரே அளவில் உள்ளதால் அணையின் நீர் மட்டம் 22 நாட்களாக 96 அடியாக நீடிக்கிறது..

Exit mobile version