மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 8000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரியை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள பகுதிகளிலும், டெல்டா பகுதிகளிலும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பை 1000 கன அடியிலிருந்து 8000 கன அடியாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 39 கன அடியாகவும், நீர்மட்டம் 63.82 அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 27.61 டி.எம்.சி. யாக உள்ளது.

Exit mobile version