திருவண்ணாமலை பகுதிகளில் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வு

தமிழக அரசின் குடிமராமத்து பணியினால், திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக ஆரணியில், மாவட்ட நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கையால், குளங்கள் சீர்செய்யப்பட்டு, மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த இரண்டு தினங்களில், இப்பகுதியில் பெய்த மழையால், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version