தென்காசி குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.  நேற்றிரவு மேற்கு தொடர்ச்சி மலையில், பரவலாக மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூட்டம் மிகக் குறைவாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

Exit mobile version