மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில், அணையில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.

இதனிடையே பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்ததால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 66 அடியாக இருந்தது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 4 ஆயிரத்து 700 அடியாக சரிந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 புள்ளி 74 அடியாக இருந்தது.

Exit mobile version