கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்காக தண்ணீர் திறப்பு

தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேற்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து, கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைத்தனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர முதலமைச்சர், தண்ணீர் திறந்து விடுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவின் பேரில், ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் கிருஷணா நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Exit mobile version