ஒகேனக்கல், மேட்டூர் அணையில் நீர்வரத்து சரிவு

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உபரி நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து இன்று காலை 8,000 கன அடியிலிருந்து 5,699 கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிகபட்சமாக 11,300 கனஅடி உபநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் உபரிநீர் அளவு சுமார் 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது 14-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை 8,000 கன அடியிலிருந்து 5,699 கன அடியாக குறைந்துள்ளது. நீர் வரத்தைக் காட்டிலும், நீர் வெளியேற்றம் குறைவாக உள்ளதால் நீர்மட்டம் ஒரே நாளில் 51.97 அடியிலிருந்து 52.57 அடியாக உயர்ந்துள்ளது.

Exit mobile version