மலையிலிருந்து குதித்து சாகசம் செய்ய விரும்பிய வீரர் பாறையில் மோதி படுகாயம்

ஸ்காட்லாந்தில் மலைக்குன்றிலிருந்து குதித்து சாகசம் செய்ய விரும்பிய வீரர் பாறையில் மோதி படுகாயமடைந்தார்.

சாம் பெர்சிவல் என்பவர் பாராசூட் மூலம் குதித்து அவ்வப்போது சாகசம் செய்து வருபவர். இந்த நிலையில், அதே பகுதியில் இருந்த 200 அடி உயர மலை மீது இருந்து குதிக்க முற்பட்டார். சரியான நேரத்தில் குதித்தும், காற்றின் வேகம் காரணமாக பாராசூட்டுடன் சேர்ந்து பாறை மீது மோதி பெர்சிவர் படுகாயம் அடைந்தார். இதில் அவருக்கு முகம் மற்றும் தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version