நாமக்கலில் மழையின் காரணமாக காவிரிக் கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அந்த மாநிலத்தின் முக்கிய அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் என்பதால் தமிழக காவிரிக் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

அதன்படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வட்டாட்சியர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களும் நகராட்சி அதிகாரிகளும் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்து அறிவுறுத்தினர்.

Exit mobile version