இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 358ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 350-ஐ தாண்டியுள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 106 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 360ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 88 பேருக்கும், டெல்லியில் 64 பேருக்கும், தெலங்கானாவில் 38 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக நான்காவது இடத்தை பிடித்துள்ள தமிழ்நாட்டில் ஒரே நாளில் 33 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும், கேரளாவில் 20 பேரும், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா, ஆந்திராவில் 4 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் மூவருக்கும், , உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா இருவருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாப், லடாக், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்து 650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 374 நோயாளிகள் வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், 77 ஆயிரத்து 516 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version