வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மலைக் கிராம வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரை மூலம் கொண்டு செல்லப்பட்டது. மக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளதை ஒட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, அந்தவகையில் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இருந்து 15 கீ.மீ தொலைவில் உள்ள கொள்ளகெவி மற்றும் திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குதிரை மூலம் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டது.

Exit mobile version