8 மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பெங்களூரில் இருந்து விருதுநகருக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, 8 மாவட்டங்களுக்குத் தனித்தனியாக அனுப்பப்பட்டது.

நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பணியை மும்மரமாக செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெங்களூரில் இருந்து விருதுநகருக்கு 7 ஆயிரத்து 778 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வந்தது. பின்னர் அவை விருதுநகரில் உள்ள தனியார் பொறியல் கல்லூரியில் இறக்கி, அம்மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மற்றும் டிஆர்ஓ. உதயக்குமார் முன்பு சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தனித்தனி வாகனங்களில் பிரித்து அனுப்பப்பட்டது

Exit mobile version