வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

பலத்த பாதுகாப்புடன் வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

வேலூர் மக்களவை தொகுதியில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் ஆயிரத்து 553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 179 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொகுதி முழுவதும் தேர்தலை ஒட்டி 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 9-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.

Exit mobile version