ஆரணி மக்களவை தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஆரணி மக்களவை தொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வந்தவாசி பகுதிகளில் உள்ள 280 வாக்குப்பதிவு மையங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.இதில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் முதல் நபராக தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் 100 வயது மூதாட்டியான தனம்மாள் என்பவர் சற்கர நாற்காலியில் வந்து வாக்களித்தது மற்ற வாக்களர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

Exit mobile version