வாக்காளர்களின் நிலையை வாக்குச்சாவடி குழு உறுதி செய்ய வேண்டும்

சென்னை ராயப்பேட்டை, அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் துவக்கி வைத்தனர். அப்போது, நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே அனைத்து மாவட்டங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கும் பணியை தொடங்கி 28 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் எனக் கூறினார்.

இடைத்தேர்தல் முன் அனைத்து வாக்குச்சவடிகளிலும் வாக்காளர்களின் நிலையை வாக்குச்சாவடி குழு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். இதுவே வெற்றிக்கான அச்சாரமாக இருக்கும் என்று துணை முதலமைச்சர் கூறினார்.

Exit mobile version