மத்தியில் வலிமையான ஆட்சி தொடர தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் : தமிழிசை

மத்தியில் வலிமையான ஆட்சி தொடர தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்று, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தமிழகம் வருகை தந்தார். தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தமிழகத்தலைவர் தமிழிசையை ஆதரித்து, நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷாவும், முதலமைச்சர் பழனிசாமியும் கலந்துகொண்டனர்.

இதற்காக ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி, சங்கரப்பேரி கிராமத்துக்கு வந்த அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் மற்றும் கூட்டணிகட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து உரையாற்றிய தமிழிசை சவுந்தரராஜன், மத்தியில் வலிமையான ஆட்சித்தொடர தாமரைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்

Exit mobile version