பொற்கால ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்: மனோஜ் பாண்டியன்

பொற்கால ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பேட்டை, சுத்தமல்லி, சேரன்மாதேவி பகுதிகளில் மனோஜ் பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேசிய அவர் அதிமுக ஆட்சியில் நெல்லை தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறியதுடன், பொற்கால ஆட்சி தொடர இரட்டை இலைச் சின்னத்திற்கு மீண்டும் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.

Exit mobile version