அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட தேமுதிகவினர் முடிவு

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு, அரியலூர் மாவட்ட தேமுதிகவினர் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அரியலூரில் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிகவினர் சிறப்பாக பணியாற்றினர் என்றும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்தும் கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து, அரியலூர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version