தென்காசியில் முதலமைச்சர் முன்னிலையில் தொண்டர்கள் அதிமுகவில் இணையும் விழா

தென்காசியில் முதலமைச்சர் முன்னிலையில் 20 ஆயிரம் தொண்டர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிக்காக, பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், தென்காசி வாய்க்கால் பாலம் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அமமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிமுகவில் இணைய உள்ளனர்.

இதற்கான பந்தல், தோரணங்கள், பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். தொண்டர்களை சந்திக்க முதலமைச்சரும், அதிமுக மூத்த அமைச்சர்களும் வருகை தருவது, அப்பகுதி அதிமுகவின் உண்மை விசுவாசிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version