அதிமுக வேட்பாளர் வெற்றிபெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் : அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தொண்டர்கள் முழு மூச்சில் பணியாற்ற வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், திருவூடல் பகுதியில் அதிமுக அலவலக கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான சேவூர் ராமசந்திரன் கலந்து கொண்டு, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் தலைமைக் கழகம் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, தொண்டர்கள் அனைவரும் முழு வீச்சில் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், செய்யாறு எம்.எல்.ஏ. மோகன், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version