தொண்டர்கள் பொதுவெளியில் நிர்வாக முறை குறித்த கருத்துக்களை கூற வேண்டாம்: அதிமுக தலைமைக்கழகம்

அதிமுக தொண்டர்கள் பொது வெளியில் கழக நிர்வாக முறைகளை பற்றி கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், கழக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து தொண்டர்களுக்கு சில அறிவுரைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், கழக உடன்பிறப்புகள் பொது வெளியில் கழக நிர்வாக முறைகளை பற்றி கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் எனவும், கழக முடிவுகளை பற்றியோ தேர்தல் முடிவுகளை பற்றியோ எங்கும் கருத்துக்களை கூற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடும் ஒழுங்கும் தொண்டர்களுக்கு கட்டாயம் தேவை. இவை சாதாரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களை கொண்டுதான் ஒர் இயக்கத்தை உலகம் எடை போடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை யார் கூற விரும்பினாலும், அதற்கென உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version