வோடஃபோன் பெஸ்டா..? ஏர்டெல் பெஸ்டா..? இத பாத்துட்டு முடிவு பண்ணுங்க …

வோடஃபோன் ஏர்டெல், செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களின் பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

வோடஃபோன் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தி உள்ளது.

வோடஃபோன் :

வோடஃபோன் 22 முதல் 67 சதவீதம் வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு முன் 28 நாளைக்கு ரூ.179 என இருந்த கட்டணம் இனி ரூ.299 ஆக இருக்கும்.

84 நாட்களுக்கு ரூ. 569 என இருந்த கட்டணம் இனி ரூபாய் 699-ஆக இருக்கும். 365 நாட்களுக்கு இதுவரை இருந்து வந்த ரூபாய் 1,699 என இருந்த கட்டணம் இனி 2, 399ஆக இருக்கும்.

ஏர்டெல் :

ஏர்டெல் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள கட்டணங்களைவிட புதிய கட்டணம் ஒரு நாளைக்கு ரூபாய் 0.50 முதல் 2.85 வரை உயர்த்தியுள்ளது. ஏர்டெல்லில் இதற்கு முன்பு 28 நாளைக்கு ரூ.129 என இருந்த கட்டணம் இனி ரூ.148-யாக இருக்கும்.

84 நாட்களுக்கு ரூ. 448 என இருந்த கட்டணம் இனி ரூபாய் 598-அக இருக்கும். 365 நாட்களுக்கு இதுவரை இருந்துவந்த ரூபாய் 1,699 என இருந்த கட்டணம் இனி 2, 398ஆக இருக்கும்.

 

Exit mobile version