விவேகானந்த நவராத்திரி நிறைவு விழா நிகழ்ச்சி : துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னையில், விவேகானந்த நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது. விவேகானந்தர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர், சிகாகோ நகரில் விவேகானந்தர் ஆற்றிய உரை, உலகளவில் இந்தியாவையும், இந்து மதத்தையும் திரும்பி பார்த்த வைத்தது என்றார். அங்கிருந்து சொந்த மாநிலத்திற்கு கூட செல்லாமல், தமிழகம் வந்து நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்ததாக கூறினார்.

Exit mobile version