பழனி முருகன் கோயிலில் கேரள ஆளுநர் சதாசிவம் சாமி தரிசனம்

பழனி முருகன் கோயிலில் கேரள ஆளுநர் சதாசிவம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கேரள ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சதாசிவம் தனது குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு முருகனை தரிசனம் செய்த அவர்கள், உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் முருகப்பெருமானின் உருவப்படம் பரிசாக வழங்கப்பட்டது.

Exit mobile version