சபாநாயகர் பதவிக்கு விஸ்வேஸ்வர் ஹெக்டே வேட்பு மனு தாக்கல்

சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார். இதையடுத்து சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சபாநாயகர் பதவிக்கு பாஜக உறுப்பினர் விஸ்வேஸ்வர் ஹெக்டே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் வேட்பு மனு வழங்கினார். சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிட வாய்ப்பில்லாததால், விஸ்வேஸ்வர ஹெக்டே ஒருமனதாக நாளை தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version