News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

விஷாலின் சக்ரா படத்தை செப்.30வரை ஓ.டி.டி.யில் விற்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

Web Team by Web Team
September 24, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
விஷாலின் சக்ரா படத்தை செப்.30வரை ஓ.டி.டி.யில் விற்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்
Share on FacebookShare on Twitter

நடிகர் விஷால் – தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித் தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் “சக்ரா” என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விசாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும், 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடவும் எனவும் தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை கொண்டு ‘சக்ரா’ என்ற பெயரில் வேறு நிறுவனத்திற்கு படம் எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ‘சக்ரா’ படத்தின் டிரெயிலரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, சக்ரா’ திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் சக்ரா பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

Tags: chakraHighCourtnewsjvishal
Previous Post

ஐ.பி.எல் 2020 – அமீரகத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்ட சுவாரஸ்யங்கள்!

Next Post

அக். 1 முதல் 10-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – தலைமைச் செயலாளர் உத்தரவு

Related Posts

அதிமுக வழக்கு – திங்கட்கிழமை ஒத்திவைப்பு!
அஇஅதிமுக

அதிமுக வழக்கு – திங்கட்கிழமை ஒத்திவைப்பு!

February 16, 2023
பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
Next Post
அக். 1 முதல் 10-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – தலைமைச் செயலாளர் உத்தரவு

அக். 1 முதல் 10-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தலைமைச் செயலாளர் உத்தரவு

Discussion about this post

அண்மை செய்திகள்

ராகுல் காந்தி கைது நடவடிக்கை.. எம்பி பதவி பறிப்பு.. எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது…!

ராகுல் காந்தி கைது நடவடிக்கை.. எம்பி பதவி பறிப்பு.. எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது…!

March 25, 2023
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியானது..!

March 24, 2023
இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

March 24, 2023
சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version