விருத்தாசலத்தில் "அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர்" பட்டாசு வெடித்ததில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

விருத்தாசலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பொது இடத்தில் பட்டாசு வெடித்ததில் அரசு பேருந்து கண்ணாடி உடைந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலத்தில் நிலவேம்பு கசாயம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக அணி சார்பில் நடத்தப்பட்டது. அப்போது விழாவுக்கு வந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி. கலைச்செல்வனை வரவேற்பதற்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். சேலத்தில் இருந்து கடலூர் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்து, பயணிகளுடன் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் நின்றுகொண்டிருந்தது.

பட்டாசு வெடித்ததில் கண்ணாடி உடைந்து அரசு பேருந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உடைக்கப்பட்ட பஸ் கண்ணாடியை பார்வையிட வந்தனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் போக்குவரத்து கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடைந்த கண்ணாடிக்கு நஷ்ட ஈடாக சட்டமன்ற உறுப்பினர் வி.டி. கலைச்செல்வன் ரூ5000 கொடுக்க சொன்னதாக கொடுத்துள்ளனர். இதனால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் கண்ணாடியை உடைத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் பெயரளவிற்கே நிலவேம்பு கசாயம் வழங்கியதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

Exit mobile version