கேரளாவில் வன்முறை: பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு

கேரளாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிந்து, கனகதுர்கா ஆகிய இளம் பெண்கள் இருவர் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கேரளாவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். நேற்று மாலைவரை, வன்முறையில் 30 போலீசார் காயமடைந்தனர். இதுவரை 750 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறை சம்பவங்கள் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version