ராஜ்நாத் சிங் கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட ஆசாமிகள்

உத்தர பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற கூட்டத்தில் குடி போதையில் ரகளை செய்தவர்களை பாஜகவினர் அப்புறப்படுத்தினர்.ஜலன் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பானு பிரதாப் வர்மாவை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது குடி போதையில் வந்த இருவர் பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து பாஜக தொண்டர்கள் அவர்கள் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version