ஊரடங்கு உத்தரவின்போது விதி மீறல் – 1015 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறிய குற்றத்திற்காக ஆயிரத்து 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், 159 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தமிழக காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று மாலை 6 மணி முதல், இன்று காலை 6 மணி வரை சென்னை பெருநகர காவல் துழுவினர் மேற்கொண்ட சோதனையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக 278 வழக்குகளும், தனிமைபடுத்தப்பட்ட நபர்கள் மீது 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 120 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 123 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்து 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version