நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு

டெல்லி மாணவி நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளி வினய் குமார் சர்மாவின் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக் ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. இந்நிலையில், இன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை 2வது முறையாக டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனவும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு குற்றவாளி வினய் குமார் சர்மா தாக்கல் செய்த கருணை மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதனிடையே, குற்றவாளி அக்ஷய் குமார் சிங் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.

Exit mobile version