“இரண்டு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த தம்பதியினர்”-பத்திரமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சக்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் மோட்டார் கொட்டகையில் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த தம்பதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விழுப்புரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக செஞ்சி சக்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்த 75 வயதான ஏழுமலை, தனது மனைவியுடன், சக்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள மின் மோட்டார் கொட்டகையில் இருந்துள்ளனர்.கொட்டகை முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக கொட்டகையின் கூரை மேல் நின்று உதவி கோரியுள்ளார். இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தம்பதிகள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Exit mobile version