விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதிகனமழை பதிவு

கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து விட்டதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளதுள்ளதாக தெரிவித்தார்.

திண்டிவனம், வல்லம், வளவனூர், மணம்பூண்டி, கோலியனூரில் தலா 22 சென்டி மீட்டர் மழையும், புதுச்சேரியில் 19 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Exit mobile version